Vaiko in Parliament புத்தக வெளியீட்டு விழா: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!

Vaiko in Parliament புத்தக வெளியீட்டு விழா: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்

3 ஆகஸ்ட், 2026
2 நிமிடம் படிக்க
The Times of India samayam
Vaiko in Parliament புத்தக வெளியீட்டு விழா: டெல்லி புறப்பட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க, தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் டெல்லி புறப்பட்டுச் சென்றார்

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான 'Vaiko in Parliament' புத்தக வெளியீட்டு விழா நாளை புது டெல்லியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாகப் பங்கேற்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (ஆகஸ்ட் 3, 2026) டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தேசிய அளவிலான முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் பங்கேற்கும் இந்த விழா, தற்போதைய அரசியல் சூழலில் உற்று நோக்கப்படும் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது.

4 தொகுதிகளாக வெளியாகும் வைகோவின் நாடாளுமன்ற உரைகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளிலும் ஈழத்தமிழர் விவகாரம், மாநில சுயாட்சி, தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய விவாதங்களின் தொகுப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 பெரிய ஆங்கிலத் தொகுதிகளாக (4 Volumes) இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் முகப்பில் "நாடாளுமன்றத்தின் சுவர்கள் இன்றும் வைகோவின் குரலை எதிரொலிக்கின்றன" (The walls of Parliament still echo Vaiko's voice) என்ற வாசகம் அச்சிடப்பட்டு கம்பீரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
 


ராகுல் காந்தி வெளியிடுகிறார்: டெல்லியில் குவியும் தேசிய தலைவர்கள்
 

நாளை (ஆகஸ்ட் 4) புது டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club) இந்த விழா நடைபெறுகிறது. இப்புத்தகத்தை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முறைப்படி வெளியிட, நூலின் முதல் பிரதியை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொள்கிறார். இவர்களுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

 

முதலமைச்சர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் ராஜ்மோகன் பயணம்

முதலில் இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்கேற்பதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லியில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசல் காரணங்களால், வைகோவின் வேண்டுகோளின்படி முதலமைச்சர் தனது டெல்லி பயணத்தைத் தவிர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், தமிழக அரசின் முழுப் பிரதிநிதியாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு விரைந்துள்ளார்.
 


சென்னையில் விரைவில் வெளியாகும் தமிழ் பதிப்பு!

டெல்லியில் நடைபெறும் இந்த ஆங்கிலப் புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புப் பதிப்பான "நாடாளுமன்றத்தில் வைகோ" நூல் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தமிழ் பதிப்பு நூல் வெளியீட்டு விழா விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளதாகவும், அதில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

செய்தித்தாள் படம்

Newspaper clipping

பகிர்