மது, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வரும் ஜன., 2 முதல் 12ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதற்காக மண்டல வாரியாக வைகோ நேரில் சென்று தொண்டர்களை தேர்வு செய்து வருகிறார்.
அதையொட்டி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ம.தி.மு.க., இளைஞரணி, மாணவரணி மற்றும் தொண்டரணியிலிருந்து நடைபயணத்தில் பங்கேற்கும் தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி கடலுார் அடுத்த ஆணையம்பேட்டையில் நேற்று நடந்தது.
