நடைபெற இருக்கும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.
1. ஆடிட்டர் அர்ஜூனராஜ் - கழக அவைத் தலைவர்
2. மு.செந்திலதிபன் - கழகப் பொருளாளர்
3. சு.ஜீவன் - உயர்நிலைக் குழு உறுப்பினர்
4. வி.சேஷன் - தேர்தல் பணிச் செயலாளர்
மேலே அறிவிக்கப்பட்டுள்ள குழுவினர் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
21.02.2026
