மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு ஒன்று இணையத்தில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்துடன் மதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவாக பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் வைகோ. முதல்வர் ஜோசப் விஜய்க்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் எனவும் கருத்து கூறி கொண்டிருக்கிறார். அதோடு ஏற்கனவே கூட்டணியில் இருந்த திமுக மீதும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் வைகோ பகிர்ந்துள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக தவெக ஆதரவு நிலைப்பாட்டினை மதிமுக எடுத்தது. வைகோவும் அவரது மகன் எம்பி துறையும் தமிக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இது அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பிய நிலையில், தவெக பக்கம் செல்வதற்கு மதிமுக தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து சமீபத்தில் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக மதிமுக வெளியேறியது.
தொடர்ந்து தவெக கூட்டணியிலும் மதிமுக இணைந்தது. இதனை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் அரசுக்கு ஆதரவாக இருப்போம் என தொடர்ச்சியாக வைகோ கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை அவர் பகிர்ந்துள்ளார் வைகோ. அதாவது எதிர்க்கட்சிகள் தவெக ஆட்சி நீடிக்காது. சீக்கிரமே இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என பேசி வருகின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்னொரு முறை தேர்தல் வந்தால் 180 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெற்று முதல்வர் விஜய் ஆட்சி அமைப்பார் என பதிவிட்டுள்ளார் வைகோ. அவரின் இந்த பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் நிலையில் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரம் இதைத்தான் திமுக கூட்டணியில் இருந்த சமயத்திலும் வைகோ கூறி வந்தார். தற்போது தவெக கூட்டணிக்கு வந்ததும் அவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் என வைகோவின் பதிவை சிலர் கிண்டலடித்தும் கொண்டிருக்கின்றனர்.இது அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக வைகோ பகிர்ந்த பதிவில், எதிர்க்கட்சிகள் 6 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் ஆணித்தரமாக சொல்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லாமல் விஜய் தலைமையிலான அரசு உறுதியாகத் தொடரும். தவெக அரசுக்கு தொடர்ந்து மதிமுக அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது தவெக ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால், 180 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார் வைகோ. இதற்கிடையில் நேற்றைய தினம் இவர் விசிக தலைவர் திருமாவளவனை கிண்டலடித்து தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. அதாவது தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது என திருமாவளவன் தெரிவித்த கருத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என கிண்டலாக கமெண்ட் அடித்தார்.
இதனையடுத்து அவரின் இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த திருமாவளவன், அவருடைய பரிந்துரைக்கு நன்றி. நோபல் பரிசு கிடைத்தால், வைகோவுக்கு நன்றி சொல்வேன் என பதிலடி கொடுத்திருந்தார். இந்த வார்த்தை விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. அதோடு வைகோவின் கருத்துக்கு விசிகவினர் பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
