“அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மை சுக்குநூறாக்கியது. இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோவை மண்டல தேர்தல் நிதியளிப்பு விழா, அக்கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மண்டல நிர்வாகிகளிடம் 1 கோடியே 80 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய வைகோ, திராவிட இயக்கத்திற்காக ஈரோடு மண்ணிலிருந்து உழைக்கத் தொடங்கிய தனது நீண்ட நெடிய அரசியல் பயணத்தின் முக்கியத் திருப்புமுனைகளை உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.
