தந்தை பெரியார் நினைவுநாள்!
வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்!
தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவுநாளை முன்னிட்டு, இன்று 24.12.2025 புதன்கிழமை காலை 8 மணியளவில் சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
கழக அமைப்புச் செயலாளர் தாயகம் சு.குருநாதன், கொள்கை விளக்க செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சு.ஜீவன் எம்.சி., டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி எம்.சி., உள்ளிட்ட கழக முன்னணியினர் திரளாகக் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினர்
