போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் ஒழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற சமத்துவ நடைபயணம் நேற்று நிறைவு பெற்றது. விழாவில் வைகோ தனது உரையில், சாதி வன்முறை, மதவெறி, போதை பழக்கம் போன்ற சமூக சீர்கேடுகளை கடுமையாக விமர்சித்தார். இதில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், சாதாரண மனிதர்கள் விரிந்து பார்க்கும் மாமனிதர் வைகோ. தமிழக மக்களுக்காக 6 ஆயிரம் கி.மீ. நடந்துள்ளார். நிழல் விரிகுடாவுக்கு பதிலாக நில விரிகுடாவாக இருப்பவர் வைகோ. மதச்சார்பற்ற தன்மை தான் இந்திய அரசியலின் அடையாளம். உலகம் முழுவதும் மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அடி தோள வெண்டா. இந்த சமத்துவ நடைபயணம் மிக முக்கியமானது.
