அரசியல் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை? வைகோ கேள்வி

அரசியல் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை? வைகோ கேள்வி

நேற்றைய தினம் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் ஆளுநரும் இருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பி வைகோ பேசியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜெ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

2 March 2026
2 min read
The Times of India samayam
அரசியல் மாநாட்டில் ஆளுநருக்கு என்ன வேலை? வைகோ கேள்வி

நேற்றைய தினம் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் ஆளுநரும் இருந்தார். இதுகுறித்து கேள்வி எழுப்பி வைகோ பேசியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜெ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மதிமுக பொது செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா, தேசிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே எம் காதர் முகைதீன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய பெருமக்கள் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு பின்னர் அறுசுவை உணவு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமலான் நோன்பு என்று குரானில் கூறப்பட்டுள்ளது.. அப்படிப்பட்ட இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையான ரமலான் நோன்பு நிகழ்வை வசதியற்ற ஏழை எளிய மக்களுக்காக இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்த பட்டது என்றார்.

தொடர்ந்து மதுரை என்.டி.ஏ மாநாடு குறித்து பேசிய அவர், மதுரையில் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் மாநாட்டில் தமிழ்நாட்டின் ஆளுநருக்கு அங்கே என்ன வேலை? என கேள்வி எழுப்பினார். அனைத்து மதங்களையும் மதிக்கும் நாடாக எங்கள் செந்தமிழ் நாடு உள்ளது.. எந்த சூழலிலும் இந்துதுவா ஆர்எஸ்எஸ் கும்பலை தமிழ்நாட்டில் அனுமதிக்கவே கூடாது. நான் இத்தனை ஆண்டுகளில் எந்த இஃப்தார் நிகழ்வுகளிலும் அரசியல் பேசியதில்லை என்றார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து பேசிய வைகோ, “ஈரானை அடியோடு அழிக்க போகிறேன் என்று டிரம்ப் கூறுகிறார்..அமெரிக்க சரித்திரத்தில் இப்படி ஒரு கோமாளி குடியரசு தலைவராக இருந்தது இல்லை. ஐநா சபை உயிரோடு இருக்கிறதா? ஆனால் இங்கே இருக்கும் பிரதமர் இஸ்ரேல் செல்கிறார் என்றார். மேலும் அவர் பேசுகையில் கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் மெல்ல வளர்ந்து வரும் பாஜக தமிழகத்தில் நுழைய பார்க்கிறது. ஆனால் அதற்கு ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என பேசியிருக்கிறார்.

பெரியார் புகைப்படம் மதுரையில் நடைபெற்ற மேடையில் தூக்கி எரியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி செயல்பட தொடர்ந்து 2026 இல் திமுக வெற்றி பெற வேண்டும்.அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி பேசினார்.

Newspaper Clipping

Newspaper clipping

Share this article