த.வெ.க கூட்டணி.. பிரதமர் மோடி குட்டி கரணம் போட்டாலும் திமுக வெற்றி உறுதி - வைகோ பேச்சு!

த.வெ.க கூட்டணி.. பிரதமர் மோடி குட்டி கரணம் போட்டாலும் திமுக வெற்றி உறுதி - வைகோ பேச்சு!

தூத்துக்குடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பாஜக கூட்டணியில் த.வெ.க. இணைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு ? அத்தைக்கு மீசை முளைத்த பிறகு தான் சித்தப்பா என்று சொல்ல முடியும் யூகங்கள்,விருப்பங்கள் செய்திகளாக பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது .இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி(த.வெ.க) பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.

14 March 2026
2 min read
The Times of India samayam
த.வெ.க கூட்டணி.. பிரதமர் மோடி குட்டி கரணம் போட்டாலும் திமுக வெற்றி உறுதி - வைகோ பேச்சு!

தூத்துக்குடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக பாஜக கூட்டணியில் த.வெ.க. இணைந்தால் திமுக கூட்டணிக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு ? அத்தைக்கு மீசை முளைத்த பிறகு தான் சித்தப்பா என்று சொல்ல முடியும் யூகங்கள்,விருப்பங்கள் செய்திகளாக பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது .இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி(த.வெ.க) பாஜக அதிமுக கூட்டணிக்கு செல்லுமா என்று தெரியாது.

அதிமுக பாஜக த.வெ.க கூட்டணி விவாதம்
 

ஒரு வாரத்திற்குள் நிலைமை தெரியும். யார் யாரோடு கூட்டு சேர்ந்தாலும் சரி , புதிய கட்சி (த.வெ.க) பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தாலும் சரி , என்ன முயற்சி செய்தாலும் மோடி குட்டி கரணம் போட்டாலும் ஒன்றும் நடக்காது திமுக தான் வெற்றி பெறும் திமுக கூட்டணி வெற்றி பெறும் நான் வழக்கம் போல தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்.

திமுக ஆட்சி தான் அமையும் இந்த தேர்தலுக்கு, பின்னர் தமிழக முதல்வர் பதவியை மு க ஸ்டாலின் இழப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். 3ம் தர பேச்சாளர் போல பேசுகிறார் பிரதமர். இது குறித்து சென்னையில் அறிவாலயம் முன்பு நான் பேசியதை அனைத்தையும் செய்தித்தாள் மற்றும் ஊடகங்கள் கட் செய்துவிட்டன.

அங்குள்ள டிக்சனரியில் கூட என் பேர் கிடையாது. ஊடகங்களில் நடக்கும் வாதங்களில் மதிமுக என்ற பெயரை ஒருத்தர் கூட சொன்னது கிடையாது எங்களை விட குறைந்த அளவு ஆதரவு கொண்ட கட்சிகளை கூட வானளாவிற்க்கு புகழ்ந்து பேசுகின்றனர். மதிமுக வலுவாக இருக்கிறது .அதை நிரூபிக்கத்தான் நான் பாதயாத்திரை சென்றேன். எங்கள் கட்சி பெயரை உச்சரிக்க கூட மனமில்லை. இப்போது நான் சொல்வது கூட போட மாட்டார்கள் .

கேஸ் கட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் சிறிய தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை உள்ளது. சுடுகாட்டில் உடலில் கொண்டு சென்றால் அங்கேயும் வேலை நடக்கவில்லை. எரிப்பதற்கு கேஸ் தேவைப்படும் இடங்களில் கேஸ் இல்லை. இப்படி ஒரு பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் கிடைக்காத நிலை, டீசல், பெட்ரோல் இனி கிடைக்குமா என்ற நிலை பயந்து கவலை கொண்டிருக்கும் நிலையில் இத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம் ? ஒரே ஒரு ஆள் தான் டொனால்ட் டிரம்ப்.

 

திமுக கூட்டணி வெற்றி உறுதி

ஹிட்லர் அனைத்து யூதர்களை அழிப்பேன் என்று கூறியது போல வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டு ட்ரம்ப் ஈரான் மக்களை அழிப்பேன் என்று கூறுகிறார் சமையல் கட்டுகளில் நம்முடைய சகோதரிகள் கஷ்டப்படுவதற்கு ட்ரம்பு தான் காரணம். 2029 தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் நாற்காலியில் நரேந்திர மோடி உட்காரும் வாய்ப்பே கிடையாது.

என்னைப் பற்றி நல்ல விதமாக பேசுவதை விட வஞ்சப்புகழ்ச்சியா பேசுவதற்கு சிலர் இருக்கின்றனர். அதைப்பற்றி நான் கண்டு கொள்வதில்லை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட கிடையாது. விடுதலைச் சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் கூட்டணி உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் என்ற கருத்து பரிமாற்றம் நடைபெற்று தெரியும். ரஜினிகாந்த் பயப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல ஒரு பண்பாளர், மனிதாபி மனமுள்ள பண்பாளர் . யாரையும் புண்படுத்தி எப்போதும் பேச மாட்டார்.

ரொம்ப யோசனை செய்து அரசியல் நமக்கு சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்துவிட்டார் கற்பனையாக புதுக்கட்சிக்காரர்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அவரைப் பத்தி சொல்கின்றனர். தனியாக போய் கேட்டால் நடிகர் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழக தலைவர் (விஜய்) பற்றி சொல்வார் . அவர் என்ன சொன்னார் எனக்கு தெரியும் அதை நான் சொல்ல விரும்பவில்லை என்றார். தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கம் செய்ய சொல்லி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் சரியான நடவடிக்கை நடந்தால் மகிழ்ச்சி என்றார்.

 

Newspaper Clipping

Newspaper clipping

Share this article