செய்திகள்

உலகெங்கிலும் நடக்கும் முக்கியச் செய்திகள், உடனுக்குடன் வெளியாகும் தலைப்புகள் மற்றும் ஆழமான அரசியல் அலசல்களை இங்கே காணலாம்.

90 கட்டுரைகள்
1 சிறப்பு

சிறப்பு கட்டுரைகள்

தேமுதிக வருகை! காங்கிரஸ் குடுமிப்பிடி சண்டையை திமுக பொருட்படுத்தாது -வைகோவின் நச் பதில்
சிறப்பு
19 பிப்., 2026
Zee Tamil News

தேமுதிக வருகை! காங்கிரஸ் குடுமிப்பிடி சண்டையை திமுக பொருட்படுத்தாது -வைகோவின் நச் பதில்

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை அடுத்து, மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அளித்த பேட்டியில், தமிழக அரசியல் களத்தில் தற்போது நிலவி வரும் சூழலை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. குறிப்பாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்திருப்பதை அவர் "தித்திக்கும் செய்தி" என்று வர்ணித்திருப்பது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எவ்வளவு பெரிய பலத்துடன் களம் காணப் போகிறது என்பதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

அனைத்து கட்டுரைகள்

90 கட்டுரைகள்
வைகோ திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் அவர்களை சந்தித்தார்
23 பிப்., 2026
DT Next

வைகோ திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் அவர்களை சந்தித்தார்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திங்கட்கிழமை காலை திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டப்பேரவை வளாகம் வளாகத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்தார். காலை சுமார் 10.15 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாம் ஆற்றிய உரைகளின் தொகுப்புகளை முதலமைச்சரிடம் வழங்கிய வைகோ, அவற்றிற்கு முன்னுரை எழுதி தருமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ
22 பிப்., 2026
Dinamalar

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலம்: வைகோ

தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்தது பலமாக அமைந்துள்ளது என திருநெல்வேலியில் ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ தெரிவித்தார். ம.தி.மு.க., மண்டல தேர்தல் நிதி மற்றும் கழக வளர்ச்சி நிதி வழங்கும் விழா திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது.

மேலும் படிக்க
'நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்'.. நாகரிகத்தை பின்பற்றுகிறேன்.. வைகோ பேட்டி!
21 பிப்., 2026
The Times of India samayam

'நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்'.. நாகரிகத்தை பின்பற்றுகிறேன்.. வைகோ பேட்டி!

நெல்லை மண்டல மதிமுக சார்பில் தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லையில் இன்று (பிப்ரவரி 21 ஆம் தேதி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

மேலும் படிக்க
திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை..குழு அமைத்த மதிமுக
21 பிப்., 2026
The Times of India samayam

திமுகவுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை..குழு அமைத்த மதிமுக

சட்டமன்ற தேர்தல் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி மறுபக்கம் என பலத்த போட்டி இருக்கும் என தெரிகின்றது. அதே சமயம் சீமானின் நாம் தமிழர் கட்சி ,விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் போன்ற கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர்.

மேலும் படிக்க
கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது; காங்கிரசில் கருத்து வேறுபாடு நீண்டநாளாகவே உள்ளது: வைகோ
19 பிப்., 2026
The Times of India

கூட்டணி அரசு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது; காங்கிரசில் கருத்து வேறுபாடு நீண்டநாளாகவே உள்ளது: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வியாழக்கிழமை கூறியதாவது, கூட்டணி அரசு என்பது தமிழ்நாட்டின் மண்ணிற்கு பொருந்தாதது; அடுத்த அரசை திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தனித்த பெரும்பான்மையுடன் அமைக்கும் என்றார்.

மேலும் படிக்க
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இழுபறி: வைகோ கொடுத்த ரியாக்சன்
17 பிப்., 2026
The Indian Express Tamil

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இழுபறி: வைகோ கொடுத்த ரியாக்சன்

தமிழக இடைக்கால பட்ஜெட் அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது. 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்து செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
17 பிப்., 2026
Daily Thanthi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு அடியோடு அகற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்திலும், நீதிமன்றங்களிலும், ஆட்சி, அதிகார முகமைகளிடமும் தாமிர உருக்காலை ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி நீண்ட நெடிய போராட்டம் நடத்தி வந்தனர் என்பதை நாடறியும். நச்சாலைக்கு எதிரான மக்களின் அறப் போராட்டத்தின் போது மக்களின் மீதான உச்சக்கட்ட தாக்குதலாக 2018 மே 22 அன்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு 15 உயிர்களைக் கொடூரமாக காவு கொண்டது.

மேலும் படிக்க
‘அரங்கேற்றம்’ பட நாயகி போல என்னை அழித்துக் கொண்டேன்: வைகோவின் சோகக் கதை
16 பிப்., 2026
Hindu Tamil Thisai

‘அரங்கேற்றம்’ பட நாயகி போல என்னை அழித்துக் கொண்டேன்: வைகோவின் சோகக் கதை

கூட்டணிக் கணக்கில் தவறுகளை செய்ததால் அரசியலில் பாதிக்கப்பட்டேன், ‘அரங்கேற்றம்’ திரைப்பட நாயகி போல என்னை நானே அழித்துக் கொண்டேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனையுடன் தெரிவித்தார். ஈரோட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: நமது கட்சிக்கு எத்தனையோ சோதனைகள், துர்பாக்கியங்கள் நிகழ்ந்துள்ளன. எனக்கு உடல்நிலை சரியில்லாதபோது, கட்சி முடிந்ததாக சிலர் விமர்சனம் செய்தார்கள்

மேலும் படிக்க
“இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக; அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனது” - வைகோ
15 பிப்., 2026
News 18 Tamil nadu

“இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக; அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனது” - வைகோ

“அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது தான் என் அரசியல் வாழ்வின் நம்பகத்தன்மை சுக்குநூறாக்கியது. இமயம் போல் உயர்ந்து இருக்க வேண்டிய மதிமுக அதிமுகவுடன் கூட்டணியால் பாடுபாதாளத்திற்கு போனது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எடுபடாது; ஏற்கப்படாது - வைகோ"
13 பிப்., 2026
Daily Thanthi

"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு எடுபடாது; ஏற்கப்படாது - வைகோ"

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க. உடன் ம.தி.மு.க. கூட்டணி அமைத்து உள்ளது. எங்களது கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க
ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இங்கு எடுபடாது' - வைகோ தடாலடி
12 பிப்., 2026
Etv Bharat

ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு கோரிக்கை இங்கு எடுபடாது' - வைகோ தடாலடி

தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும் போது ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைகள் எடுபடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

மேலும் படிக்க
கூட்டணி ஆட்சி.. மதிமுக ஒரு சொல் கூட.. அடித்து சொன்ன வைகோ
12 பிப்., 2026
The Times of India samayam

கூட்டணி ஆட்சி.. மதிமுக ஒரு சொல் கூட.. அடித்து சொன்ன வைகோ

நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது என தெரிவித்திருந்தார். இதனையடுத்து அதுப்பற்றிய விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் பங்கு என்பதை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கூட்டணி ஆட்சி பற்றி சில பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
நாளை மறுநாள் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ..!
10 பிப்., 2026
Top Tamil news

நாளை மறுநாள் மதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: வைகோ..!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.

மேலும் படிக்க
12ம் தேதி ஸ்டிரைக் மக்கள் ஆதரவு தர வைகோ வேண்டுகோள்
10 பிப்., 2026
Dinakaran

12ம் தேதி ஸ்டிரைக் மக்கள் ஆதரவு தர வைகோ வேண்டுகோள்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய பாஜ அரசு, கடந்த நவம்பர் 21ம்தேதி அறிவித்த தொழிலாளர் நல சட்ட திருத்தம் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிப்ரவரி 12ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது

மேலும் படிக்க
“மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்” – வைகோ!
7 பிப்., 2026
News 7 Tamil

“மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்ரவரி 12 இல் ஆர்ப்பாட்டம்” – வைகோ!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “மத்திய அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று மக்களவையில் தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாமல், பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்து பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சித்து இருக்கிறது.

மேலும் படிக்க
வைகோவின் நாடாளுமன்ற உரைகள் ஐந்து தொகுதிகளாக நூலாக வெளியீடு
6 பிப்., 2026
The Hindu

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் ஐந்து தொகுதிகளாக நூலாக வெளியீடு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெள்ளிக்கிழமை சென்னைில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய உரைகள் பல ஆயிரம் பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதி நூல்களுக்கு முன்னுரை எழுதுமாறு கேட்டுக்கொண்டார். வைகோ, மாநிலங்களவையிலும் மக்களவையிலும் உறுப்பினராக பணியாற்றியவர். மேலும், இந்நூல் தொகுப்புகளுக்கு தமது குறிப்புகளை வழங்குமாறு தி ஹிந்து முன்னாள் முதன்மை ஆசிரியர் என். ராம் அவர்களிடமும் கேட்டுக்கொண்டதாக வைகோ தெரிவித்தார்.

மேலும் படிக்க
மருத்துவமனையில் நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த வைகோ
6 பிப்., 2026
Hindu Tamil Thisai

மருத்துவமனையில் நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த வைகோ

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நலம் விசாரித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 101 வயதைக் கடந்த நிலையில், முதுமை காரணமாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளுக்கு அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க
இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க கோரி வைகோ வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு
6 பிப்., 2026
Dinakaran

இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க கோரி வைகோ வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்து உத்தரவிட்டது.  தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2013ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் படிக்க
"வருங்கால முதல்வர்" கோஷம்… உடனே கண்டித்த வைகோ! "நாங்கள் வாக்கு வங்கி கட்சி அல்ல" – மேடையிலேயே பேச்சு
4 பிப்., 2026
Oneindia

"வருங்கால முதல்வர்" கோஷம்… உடனே கண்டித்த வைகோ! "நாங்கள் வாக்கு வங்கி கட்சி அல்ல" – மேடையிலேயே பேச்சு

மதிமுக தொண்டர்கள் வைகோ வரும்போது ‘வருங்கால முதல்வர்’ கோஷமிட்டதை வைகோ கண்டித்துள்ளார். மேலும் “நாங்கள் பெரிய வாக்கு வங்கியை பின்னணியாகக் கொண்ட கட்சி என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அதேபோல், எந்தக் காலத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று முழங்கியதும் இல்லை” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
'தவெக குறித்த கேள்வி...' ஒற்றை வரியில் ரியாக்ட் செய்த வைகோ
3 பிப்., 2026
Nakheeran

'தவெக குறித்த கேள்வி...' ஒற்றை வரியில் ரியாக்ட் செய்த வைகோ

'திராவிட இயக்கத்தை பாதுகாப்பதற்காக மதிமுக உறுதியான முடிவெடுக்கும். நான் திராவிட இயக்கத்தில் என்னுடைய முழு வாழ்வையும் அர்ப்பணித்திருக்கிறேன்' என வைகோ தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், ''மத்திய அரசின் பட்ஜெட் குறித்து காலையிலேயே செய்தியாளர்களைச் சந்தித்துச் சொல்லிவிட்டேன்.

மேலும் படிக்க
“மோடி தனக்குப் பெயர் சம்பாதிப்பது எப்படி என்பதைக் நன்றாக அறிந்தவர்” : வைகோ
3 பிப்., 2026
The Hindu

“மோடி தனக்குப் பெயர் சம்பாதிப்பது எப்படி என்பதைக் நன்றாக அறிந்தவர்” : வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இல்லை என்றாலும், தனக்குப் பெயர் சம்பாதிப்பது எப்படி என்பதைக் அவர் நன்றாக அறிந்தவர் என திங்கள்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கமில்லை – வைகோ
2 பிப்., 2026
Daily Thanthi

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்கும் நோக்கமில்லை – வைகோ

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் ஆளுமை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க
2026ல் திமுக தனிப்பெரும்பான்மை உறுதி.. ஸ்டாலின் மீண்டும் தான் முதல்வர் - வைகோ!
2 பிப்., 2026
The Times of India samayam

2026ல் திமுக தனிப்பெரும்பான்மை உறுதி.. ஸ்டாலின் மீண்டும் தான் முதல்வர் - வைகோ!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ
2 பிப்., 2026
Dinamani

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

2026–2027 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த நம்பிக்கை முற்றிலும் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார். கச்சா எண்ணெய் விலை 50 டாலர்களாக இருந்த போதிலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாதது மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சித்தார்.

மேலும் படிக்க
“உரசலும் இல்லை, விரிசலும் இல்லை” – பரபரப்பை கிளப்பிய வைகோ
30 ஜன., 2026
Daily Thanthi

“உரசலும் இல்லை, விரிசலும் இல்லை” – பரபரப்பை கிளப்பிய வைகோ

கூட்டணியில் “உரசலும் இல்லை, விரிசலும் இல்லை” – வைகோ சென்னை எழும்பூரில் நடைபெறும் சதகமணி திரையரங்கின் 17ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் எந்த உரசலும் இல்லை, விரிசலும் இல்லை என்றும், தனிப்பெரும்பான்மையுடன் திமுக மகத்தான வெற்றி பெறும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், திமுக வேட்பாளர் குழு அறிவித்து 24 மணி நேரத்தில் மதிமுகவும் குழு அமைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க
திமுக-காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ
30 ஜன., 2026
Daily Thanthi

திமுக-காங்கிரஸ் இடையேயான நெருடல் மறைந்து போகும்: வைகோ

திருச்சி விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நெருடல் இருப்பது போல் சொன்னும், ஆனால் அது மறைந்து போகும். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, ராஜ்யசபை சந்தித்து பேசியதில் நெருடல் இருந்தது. இதனை அமைச்சரை எப்படிப் பழனிசாமி சந்தித்ததோ அப்படிப் பழனிசாமி தத்தெடுத்தார். அ.தி.மு.க.வை பாஜகவினர் தலைவர்கள் எவ்வளவு அவமானப்படுத்தினாலும், அதை சகித்துக் கொண்டிருந்ததான் பழனிசாமி.

மேலும் படிக்க
“வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டும்.”
30 ஜன., 2026
ANI

“வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டும்.”

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ, வரவிருக்கும் ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு எதிராக பாகுபாடுடன் அமையும் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மொழி அரசியலில் ஈடுபட்டு, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க
மத்திய அரசு தன்னைப் பற்றி பெருமையாகப் பேசி மக்களை ஏமாற்ற முடியாது: வைகோ
29 ஜன., 2026
The Hindu

மத்திய அரசு தன்னைப் பற்றி பெருமையாகப் பேசி மக்களை ஏமாற்ற முடியாது: வைகோ

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் வழக்கமான உரையில் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசி மத்திய அரசு மக்களை ஏமாற்ற முடியாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும் படிக்க
“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப்பேசுவது ஜனநாயகத்தில் நடப்பதுதான்” - கூட்டணி பற்றி வைகோ விளக்கம்
28 ஜன., 2026
Hindu Tamil Thisai

“கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப்பேசுவது ஜனநாயகத்தில் நடப்பதுதான்” - கூட்டணி பற்றி வைகோ விளக்கம்

கட்சிகள் அணி மாறுவது, மாற்றிப் பேசுவது ஜனநாயகத்தில் நடப்பது தான்” என கூட்டணி குறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை வந்தார். அப்போது, அவர் தமிழ்நாடு ஹோட்டலில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எஃகு கோட்டை போன்று உறுதியாகவும், பலமாகவும் உள்ளது.

மேலும் படிக்க
'பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியவர் கலைஞர் கருணாநிதி' - வைகோ ஆவேச பேச்சு...
26 ஜன., 2026
Abp Nadu

'பட்டியலில் இருந்து எனது பெயரை நீக்கியவர் கலைஞர் கருணாநிதி' - வைகோ ஆவேச பேச்சு...

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு தினப் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அப்போது, தனது அரசியல் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்குக் கடும் கண்டனத்தையும் அவர் பதிவு செய்தார்.

மேலும் படிக்க
திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு
26 ஜன., 2026
Etv Bharat

திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

75 ஆண்டுகால பாரம்பரியத்தைக் கொண்ட திராவிடத்தை அழித்தொழிப்பது ஒருக்காலமும் நடக்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். மயிலாடுதுறையில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. துணை பொதுச்செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசினார்.

மேலும் படிக்க
மோடி நினைப்பது எடப்பாடி சொல்வது ஒருபோதும் நடக்காது: வைகோ பளீர்
25 ஜன., 2026
Dinakaran

மோடி நினைப்பது எடப்பாடி சொல்வது ஒருபோதும் நடக்காது: வைகோ பளீர்

வரும் தேர்தலில் மோடி நினைப்பதும் நடக்காது, எடப்பாடி சொல்வதும் நடக்காது என வைகோ கூறினார். திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: அதிமுக கூட்டணியால் தேர்தல் ரேஸில் திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க இயலாது. அதிமுக-பாஜ கூட்டணியில் பெரும் முரண்பாடுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்கிறார்.

மேலும் படிக்க
“என்டிஏ வலிமை இல்லை: 2026 தமிழ்நாடு தேர்தலில் திமுக வெற்றி வருமென MDMK பொதுச்செயலாளர் வைகோ முன்னறிவிப்பு”
24 ஜன., 2026
ANI

“என்டிஏ வலிமை இல்லை: 2026 தமிழ்நாடு தேர்தலில் திமுக வெற்றி வருமென MDMK பொதுச்செயலாளர் வைகோ முன்னறிவிப்பு”

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ: “தமிழ்நாட்டில் என்டிஏ வலிமை இல்லை, 2026 தேர்தலில் திமுக வெற்றி” மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (MDMK) பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வலிமை வாய்ந்தது அல்ல என கூறி, இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தெளிவான பெரும்பாலனுடன் அரசு அமைக்குமென முன்கூட்டியே தெரிவித்தார்.

மேலும் படிக்க
‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ
23 ஜன., 2026
Daily Thanthi

‘எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்’ - வைகோ

சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- “சூரியன் எப்போதும் மறையாது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் நாற்காலி என்பது கேள்விக்குறிதான்.

மேலும் படிக்க
என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது: வைகோ
23 ஜன., 2026
Dinakaran

என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது: வைகோ

என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது: வைகோ என்.டி.ஏ. கூட்டணியில் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம்; ஆனால் தேர்தலில் வெல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார். வெற்றி பெற முடியாத ஒரு கூட்டணியை அமைத்து முயற்சி செய்து பார்க்கிறார்கள். நெஞ்சிலே வஞ்சகத்தை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தை கரித்துக் கொட்டுகிறார்கள்; அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் என வைகோ கூறியுள்ளார்.

மேலும் படிக்க
அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் - வைகோ கண்டனம்
20 ஜன., 2026
Daily Thanthi

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் - வைகோ கண்டனம்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார். பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதுதான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும், தேசிய கீதம் பாடவில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார்.”

மேலும் படிக்க
அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!
20 ஜன., 2026
News 7 Tamil

அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, வழக்கம் போல ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதன் மூலம் சட்டமன்ற மரபுகளை துச்சமாகக் கருதி அவமதித்து இருக்கிறார். பேரவை தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதமும் பாடுவதும்தான் மரபு என்பதை ஆளுநருக்கு சட்டப்பேரவை தலைவர் பலமுறை எடுத்துக் கூறியும் தேசிய கீதம் பாட வில்லை என்று காரணம் காட்டி வேண்டுமென்றே ஆளுநர் சட்டமன்றத்தைப் புறக்கணித்துள்ளார்.

மேலும் படிக்க
தரணிவாழ் தமிழர்கள் அனைவருக்கும்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்து
14 ஜன., 2026
Daily Thanthi

தரணிவாழ் தமிழர்கள் அனைவருக்கும்... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:— “உலகம் மகிழும் உன்னத விழாவான தமிழர்கள் கொண்டாடும் ஐந்து திருநாள் விழா! பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான, பொன்னான விழா! உழவர் போற்றும் உன்னதத் திருவிழா, கைதி திருவிழா, தமிழர் திருவிழா, பொங்கல் திருவிழா!

மேலும் படிக்க
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது வைகோ கடும் விமர்சனம்
13 ஜன., 2026
Dinamalar

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது வைகோ கடும் விமர்சனம்

“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டு, நீதிபதிகள் எல்லை மீறியுள்ளனர்”, என, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டினார்.

மேலும் படிக்க
நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ: நடிகர் சத்யராஜ்
13 ஜன., 2026
Daily Thanthi

நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ: நடிகர் சத்யராஜ்

போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் ஒழிப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டார் – வைகோ குற்றச்சாட்டு
13 ஜன., 2026
The New Indian Express

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அதிகார வரம்பை மீறி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செயல்பட்டார் – வைகோ குற்றச்சாட்டு

மதுரையில் நடைபெற்ற சமத்துவ நடைபயணத்தை முடித்த பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (ம.தி.மு.க) பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது அவர், “இஸ்லாமிய சமூகம் இந்து சமூகத்தின் உரிமைகளையும் வழிபாட்டு மரபுகளையும் முழுமையாக மதிக்கிறது” என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து வைகோ கவலை தெரிவித்தார்.
13 ஜன., 2026
The Times of India

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து வைகோ கவலை தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கவலை தெரிவித்துள்ளார். மதுரை ஒபுலபத்தூரையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற, அவரது ‘சமத்துவ நடைபயணம்’ நிறைவு பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்தார்.

மேலும் படிக்க
‘சமத்துவ நடைபயணம்’ பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான ஒற்றுமைக்கான அழைப்பு: வைகோ
12 ஜன., 2026
The Hindu

‘சமத்துவ நடைபயணம்’ பிரிவினைவாத சக்திகளுக்கு எதிரான ஒற்றுமைக்கான அழைப்பு: வைகோ

பல்வேறு சம்பவங்களின் மூலம், குறிப்பாக திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை முன்வைத்து, இந்துத்துவ சக்திகள் சமூகங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார். “மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் ஈடுபடும் சக்திகளை நசுக்குவதற்கான ஒரு இயக்கத்தை உருவாக்குவதே ‘சமத்துவ நடைபயணத்தின்’ நோக்கம்,” என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மேலும் படிக்க
வைகோவின் சமத்துவ நடைப்பயண நிறைவு விழா : கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் பேச்சு
12 ஜன., 2026
News 7 Tamil

வைகோவின் சமத்துவ நடைப்பயண நிறைவு விழா : கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் பேச்சு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் கடந்த 2 ம் தேதி சமத்துவ நடைபயணத்தை தொடங்கியிருந்தார். போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மேற்கோள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்தை இன்று அவர் மதுரையில் நிறைவு செய்கிறார். இதனையொட்டி மதுரையில் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், வைகோ, துரை வைகோ, நடிகர் சத்தியராஜ், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க
82 வயது... இதயத்தில் கருவி... இவ்வளவு துயரத்துடன் 174 கி.மீ நடை பயணம்: வைகோ பற்றி உருக்கமாக பேசிய துரை வைகோ
12 ஜன., 2026
The Indian Express Tamil

82 வயது... இதயத்தில் கருவி... இவ்வளவு துயரத்துடன் 174 கி.மீ நடை பயணம்: வைகோ பற்றி உருக்கமாக பேசிய துரை வைகோ

தமிழ் மண்ணுக்காகவும், தமிழர்களின் உரிமைக்காகவும் 60 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து, ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்த ஒரு தலைவரின் தியாகத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று துரை வைகோ கூறினார்.

மேலும் படிக்க
நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ
12 ஜன., 2026
Nakheeran

நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதிமுகவின் முக்கிய பிரச்சார நிகழ்வாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க
ஜனவரி 23ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு
12 ஜன., 2026
Dinakaran

ஜனவரி 23ம் தேதி மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: வைகோ அறிவிப்பு

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் 23.01.2026 அன்று காலை 10 மணியளவில் தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
மதுரையில் இன்று சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ
12 ஜன., 2026
Malaimalar

மதுரையில் இன்று சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ

மதுரையில் இன்று சமத்துவ நடைபயணத்தை நிறைவு செய்யும் வைகோ திருச்சியில் கடந்த 2-ந் தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க
ஆட்சியில் பங்கு கேட்காததற்கு பதற்றம் காரணம் அல்ல: வைகோ
12 ஜன., 2026
Dinamalar

ஆட்சியில் பங்கு கேட்காததற்கு பதற்றம் காரணம் அல்ல: வைகோ

“ஆட்சியில் பங்கு கேட்காததற்கு பதற்றம் காரணம் அல்ல” என மதுரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். போதை பொருள் ஒழிப்பு, ஜாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஜன. 2ல் திருச்சியில் நடைபயணத்தை துவக்கிய வைகோ, நேற்று மாலை மதுரை ஒத்தக்கடை வந்தார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க
ஆட்சியில் பங்கா? உபதேசம் எடுபடாது.. திராவிட மண்ணில் பலிக்காது.. வைகோ திட்டவட்டம்!
11 ஜன., 2026
The Times of India samayam

ஆட்சியில் பங்கா? உபதேசம் எடுபடாது.. திராவிட மண்ணில் பலிக்காது.. வைகோ திட்டவட்டம்!

கூட்டணியில் பங்கு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகளில் மதிமுகக்கு உடன்பாடு இல்லை என்றும், அமைச்சரவை பதவி கேட்டு ஒருபோதும் வலியுறுத்தியதில்லை என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மற்றும் மத மோதல்களைத் தடுப்பது போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி திருச்சியில் இருந்து சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார்.

மேலும் படிக்க
வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!
11 ஜன., 2026
Abp Nadu

வைகோவின் 'சமத்துவ நடைபயணம்': துரை வைகோ கண் கலங்க, பாஜகவை எச்சரித்த வைகோ!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை - மதுரையில் வைகோ பேட்டி. ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது எனக்கு சிவாஜிகணேசன், கருணாநிதியின் பராசக்தி படம்தான் தெரியும். தற்போது வந்துள்ள பராசக்தி பற்றி தெரியாது - மதுரையில் வைகோ பேட்டி.

மேலும் படிக்க
இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற அவசரத் தேவை: வைகோ
11 ஜன., 2026
The Hindu

இளைஞர்களை போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்ற அவசரத் தேவை: வைகோ

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியாக உள்ள ஒத்தக்கடையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கூடி எழுச்சியான வரவேற்பு அளித்தனர்.

மேலும் படிக்க
ஒற்றுமையும் போதையற்ற தமிழகமும் வேண்டி ‘சமத்துவ நடைபயணம்’ – வைகோ அழைப்பு
11 ஜன., 2026
The Times of India

ஒற்றுமையும் போதையற்ற தமிழகமும் வேண்டி ‘சமத்துவ நடைபயணம்’ – வைகோ அழைப்பு

வைகோ, தொண்டர்களை “உற்சாகத்துடன் (ஜோஷ்) மதுரையை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளுங்கள்” என ஊக்குவிக்கும் வகையில் தீவிர உரையொன்றை ஆற்றினார். அதன்பின்னர், வழக்கமான தனது வெள்ளை வேஷ்டி, வெள்ளை தலைப்பாகை மற்றும் கருப்பு கூலர் அணிந்து நடைபயணத்தைத் தொடர்ந்தார். போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராகவும், சமூக சமத்துவம் மற்றும் சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பிய நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் வைகோ நடைபயணம் மேற்கொண்டதை டிஓஐ (TOI) தொடர்ந்து செய்தி பதிவு செய்தது.

மேலும் படிக்க
இன்றைய 10.01.2026 ஒன்பதாம் நாள் சமத்துவ நடைபயணத்தில்
10 ஜன., 2026

இன்றைய 10.01.2026 ஒன்பதாம் நாள் சமத்துவ நடைபயணத்தில்

சமத்துவ நடைபயணம் மேற்கொண்டிருக்கும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று காலை சந்தித்து வாழ்த்தி, சிறிது தூரம் உடன் நடைபயணம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க
போதைப் பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு
10 ஜன., 2026
Dinamalar

போதைப் பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு

போதைப் பொருட்களை ஒழிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்: வைகோ பேச்சு தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்றக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருச்சியிலிருந்து மதுரை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க
‘திராவிட இயக்கம் எனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்தது’ - மேலூரில் வைகோ பேச்சு
9 ஜன., 2026
The Hindu Tamil Thisai

‘திராவிட இயக்கம் எனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்தது’ - மேலூரில் வைகோ பேச்சு

திராவிட இயக்கம் எனது நாடி, நரம்பு, சுவாசத்தில் கலந்தது என மேலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார். திருச்சியில் இருந்து மதுரைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு ஊர்கள் வழியாக பயணித்த அவர் வெள்ளிக்கிழமை மேலூரை வந்தடைந்தார். மேலூரில் கட்சி சார்பில், ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

மேலும் படிக்க
தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு
9 ஜன., 2026
Dinakaran

தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் பிரிவினை ஏற்படுத்த இந்துத்துவா சக்திகள் முயற்சி செய்கின்றன என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2ம் தேதி திருச்சியில் சமத்துவ நடைபயணம் தொடங்கி மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் 7வது நாளான நேற்று மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டியில் இருந்து வைகோ, கட்சி தொண்டர்கள் புடைசூழ நடைபயணத்தை தொடங்கினார். பின்னர் அய்யாபட்டி வழியாக கருங்காலக்குடி வந்தடைந்தார்.

மேலும் படிக்க
“எத்தனை அமித் ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” – வைகோ உறுதி
9 ஜன., 2026
India Herald

“எத்தனை அமித் ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது” – வைகோ உறுதி

மூத்த திராவிட அரசியல் தலைவர் மற்றும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற எத்தனை தலைவர்கள் தலையிட்டாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, திராவிடக் கட்சிகளுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) இடையே அரசியல் மோதல்கள் அதிகரித்துள்ள சூழலில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

மேலும் படிக்க
ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ
9 ஜன., 2026
Dinamalar

ஆட்சியில் பங்கு வேண்டாம் என்கிறார் வைகோ

மதுரை: போதையில்லா தமிழ்நாட்டை வலியுறுத்தி நடைபயணம் மேற் கொண்டுள்ள மு.க.பொதுச்செயலாளர் வைகோ, நேற்று மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அளித்த பேட்டி. அமைதி பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் வன்முறைத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. வியர்வை, ரத்தம் சிந்தி அண்ணா, கருணாநிதி கட்டி காத்த திராவிடக் கோட்டை தமிழகம்.

மேலும் படிக்க
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ
8 ஜன., 2026
The Indian Express Tamil

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென பேசியதில்லை – வைகோ

ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.,வோ, ம.தி.மு.க.,வோ கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை – நடை பயணத்தின்போது வைகோ பேட்டி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டுமென தப்பித் தவறியும் கூட பேசியதில்லை என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
நீதிபதிகள் வரம்பு மீறிவிட்டனர்: வைகோ சர்ச்சை பேச்சு
8 ஜன., 2026
Dinamalar

நீதிபதிகள் வரம்பு மீறிவிட்டனர்: வைகோ சர்ச்சை பேச்சு

சிங்கம்புணரி: திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற தீர்ப்பு வழக்கில் நீதிபதிகள் தங்கள் எல்லையை எட்டிப்பார்க்கிறார்கள். நீதிபதிகள் எல்லை தாண்டி, வரம்பு மீறி விட்டார்கள் என வைகோ பேசினார்.

மேலும் படிக்க
சமத்துவ நடைப்பயணம் : வைகோவுக்கு உற்சாக வரவேற்பு!
7 ஜன., 2026
Nakheeran

சமத்துவ நடைப்பயணம் : வைகோவுக்கு உற்சாக வரவேற்பு!

சமத்துவ நடைப்பயணம் : வைகோவுக்கு உற்சாக வரவேற்பு! மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் ஜனவரி 2ஆம் தேதி திருச்சியில் உள்ள தென்னூர் உழவர் சந்தை அருகே வெகு விமரிசையாக ஆரம்பமானது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வைகோவுடன் சிறிது தூரம் நடந்தும் சென்றார். சமூக நீதி, போதை ஒழிப்பு, மத நல்லிணக்கம், இளைஞர்களை அடிமையில் இருந்து காப்பாற்றுதல் ஆகிய குறிக்கோள்களை முன்வைத்து நடக்கும் இந்த 11 நாள் பயணம் ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் முடிவடைகிறது.

மேலும் படிக்க
தமிழ்நாட்டில் இரத்தப்பாய்ச்சி ஏற்பட்டால் நீதிபதிகளே பொறுப்பு: வைகோ
7 ஜன., 2026
The Hindu

தமிழ்நாட்டில் இரத்தப்பாய்ச்சி ஏற்பட்டால் நீதிபதிகளே பொறுப்பு: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வியாழக்கிழமை, சில நீதிபதிகள் தங்கள் எல்லைகளை மீறியுள்ளதாகவும், இதனால் இரத்தப்பாய்ச்சி ஏற்பட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்றும் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே புழுதிப்பட்டியில் நடைபெறும் ‘சமத்துவ நடைபயணம்’ (Equality Walk) நிகழ்வின் ஒரு பகுதியாக வந்த வைகோ, திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் நீதித்துறை தன் வரம்புகளை மீறிவிட்டதாகக் கூறினார்.

மேலும் படிக்க
“மதவெறியை தூண்டுவோருக்கு சாதகமான தீர்ப்பு” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வைகோ கருத்து
7 ஜன., 2026
The Hindu Tamil Thisai

“மதவெறியை தூண்டுவோருக்கு சாதகமான தீர்ப்பு” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வைகோ கருத்து

சிங்கம்புணரி: “மதுரையில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் அண்ணன் - தம்பிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இடையே மதவெறியை தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிற சில இந்துத்துவா கும்பல்களுக்கு திருப்பரங்குன்றம் தீர்ப்பு சாதகமாக போய்விட்டது” என்று வைகோ கூறினார்.

மேலும் படிக்க
திருச்சியில் சமத்துவ நடைப்பயணம் தொடக்கம்
3 ஜன., 2026

திருச்சியில் சமத்துவ நடைப்பயணம் தொடக்கம்

திருச்சியில் நடைபெற்ற சமத்துவ நடைப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நடைப்பயணத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலானது.

மேலும் படிக்க
தமிழ்நாட்டை மாற்ற சனாதன சக்திகள் சதி சமத்துவ நடைப்பயண துவக்க விழாவில் வைகோ குற்றச்சாட்டு
3 ஜன., 2026

தமிழ்நாட்டை மாற்ற சனாதன சக்திகள் சதி சமத்துவ நடைப்பயண துவக்க விழாவில் வைகோ குற்றச்சாட்டு

தமிழ் மனிதப் பண்புகள் அவர்களால் மாற்ற முடியாது; அதனால்தான் தமிழ்நாட்டை மாற்ற சனாதன சக்திகள் சதி செய்கின்றன என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

மேலும் படிக்க
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வைகோ புகழ் வணக்கம்
3 ஜன., 2026

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு வைகோ புகழ் வணக்கம்

ஜனவரி 03 மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், முதன்மைச் செயலாளர் - திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களும் இன்று திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபயணம் தொடங்குவதற்கு முன்பு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

மேலும் படிக்க
போதைப் பொருள்களும், சமூகப் பிளவும் தமிழ்நாட்டில் நுழையாமல் தடுக்கும் போராட்டத்தில் மக்கள் இணைந்திட வேண்டும்: ஸ்டாலின்
3 ஜன., 2026
The Hindu

போதைப் பொருள்களும், சமூகப் பிளவும் தமிழ்நாட்டில் நுழையாமல் தடுக்கும் போராட்டத்தில் மக்கள் இணைந்திட வேண்டும்: ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போதைப் பொருள்களும், “அதிலும் ஆபத்தான சமூக அரசியல் போதையும்” தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் தடுக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க
திரைப்படங்களில் போதைப் பொருட்களை புகழ்வது இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்: முதல்வர்
3 ஜன., 2026
The New Indian Express

திரைப்படங்களில் போதைப் பொருட்களை புகழ்வது இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்: முதல்வர்

திரைப்படங்களில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் புகழ்வது இளைஞர்களின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்தார். திருச்சியில் நடைபெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ நடைப்பயணம் (Equality March) தொடக்க விழாவில் பேசும்போது, சமூகத்தைப் பிளக்கும் மத அரசியல் “அதிக ஆபத்தான போதையாக” மாறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க
‘போதைப் பழக்கத்துக்கும், சமூகப் பிளவுக்கும் தமிழ்நாடு எதிராகப் போராடும்’
3 ஜன., 2026
The Times of India

‘போதைப் பழக்கத்துக்கும், சமூகப் பிளவுக்கும் தமிழ்நாடு எதிராகப் போராடும்’

போதைப் பழக்கமும், அதைவிட ஆபத்தான சமூக அரசியல் போதையும் தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் போராட்டத்தில் மாநிலம் ஒன்றிணைந்து செயல்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சியில் நடைபெற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான சமத்துவ பேரணி (Equality March) தொடக்க நிகழ்ச்சியில் பேசுகையில், மதத்தின் பெயரில் வெறுப்பை விதைத்து மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக மாற்றும் பிளவு சக்திகள் செயல்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க
வைகோ மேற்கொண்ட பல்வேறு நடைபயணங்கள்
2 ஜன., 2026
The Hindu

வைகோ மேற்கொண்ட பல்வேறு நடைபயணங்கள்

வாழ்க்கையின் மீது கொண்ட உற்சாகத்துக்கு இணையாக, மக்களிடையே நேரடியாகச் செல்லும் போராட்டங்களிலும் வைகோ எப்போதும் முன்நிலையிலேயே இருந்து வருகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வெள்ளிக்கிழமை திருச்சியில் இருந்து தனது இன்னொரு நடைபயணத்தைத் தொடங்கினார். இம்முறை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தவும், இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விழிப்புணர்வு பெறச் செய்யவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
2 ஜன., 2026
Dinakaran

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் தொடங்கி வைத்தார். திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று முதல் ஜனவரி.12ம் தேதி வரை வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். வைகோவின் நடைபயண நிகழ்ச்சியில் காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் படிக்க
திருசியில் இன்று எழுச்சியுடன் தொடங்கியது சமத்துவ நடைபயணம்
2 ஜன., 2026

திருசியில் இன்று எழுச்சியுடன் தொடங்கியது சமத்துவ நடைபயணம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைபயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நடைபயண இலட்சினை கொடியை வழங்கி இன்று 02.01.2026 வெள்ளிக்கிழமை திருச்சியில் தொடங்கி வைத்தார்.

மேலும் படிக்க
வைகோவின் சமத்துவ நடைபயணம்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
2 ஜன., 2026
Oneindia

வைகோவின் சமத்துவ நடைபயணம்.. திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணம் திருச்சியியில் இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக திருச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.

மேலும் படிக்க
வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
2 ஜன., 2026
Dinamalar

வைகோ சமத்துவ நடைபயணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற தலைப்பில் ஜனவரி 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசுகிறார்

மேலும் படிக்க
மத்திய அரசின் அலட்சியத்தையும் மீறி மாநில நிதியை திமுக திறம்பட கையாள்ந்தது
2 ஜன., 2026
The Hindu

மத்திய அரசின் அலட்சியத்தையும் மீறி மாநில நிதியை திமுக திறம்பட கையாள்ந்தது

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஒன்றிய அரசு நிதி விடுவிப்பில் தமிழ்நாட்டை அலட்சியமாக அணுகிய போதிலும், திமுக அரசு மாநில நிதியை திறம்பட கையாள்ந்துள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களுடன் நடைபெற்ற தனது ஆண்டுதோறும் நடைபெறும் புத்தாண்டு சந்திப்பின் போது அவர் பேசுகையில், கடந்த நான்கு மற்றும் அரை ஆண்டுகளாக திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டை பாகுபாடு செய்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க
'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது' - மாணிக்கம் தாகூருக்கு வைகோ பதிலடி!
1 ஜன., 2026
Malaimalar

'லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது' - மாணிக்கம் தாகூருக்கு வைகோ பதிலடி!

மதிமுக தலைவர் வைகோவும், விசிக தலைவர் திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிககாட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்த நிலையில், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் தங்களுக்கு கிடையாது என வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
 வைகோ நடை பயணம் கடலுாரில் தொண்டர்கள் தேர்வு
1 ஜன., 2026
Dinamalar

 வைகோ நடை பயணம் கடலுாரில் தொண்டர்கள் தேர்வு

மது, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வரும் ஜன., 2 முதல் 12ம் தேதி வரை திருச்சியில் இருந்து மதுரை வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக மண்டல வாரியாக வைகோ நேரில் சென்று தொண்டர்களை தேர்வு செய்து வருகிறார்.

மேலும் படிக்க
தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்
31 டிச., 2025
Dinakaran

தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற உறுதியேற்போம்: வைகோ வலியுறுத்தல்

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்கவேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்

மேலும் படிக்க
அண்ணாமலை ஆட்டத்தை கடந்த தேர்தலிலும் பார்த்தோம்: துரை வைகோ பதிலடி
31 டிச., 2025
Dinakaran

அண்ணாமலை ஆட்டத்தை கடந்த தேர்தலிலும் பார்த்தோம்: துரை வைகோ பதிலடி

புதுக்கோட்டையில் மதிமுக முதன்மை செயலாளர் துரை.வைகோ எம்பி நேற்று அளித்த பேட்டி: திமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. 2026 தேர்தலில் 10 தொகுதி வேண்டும் என வைகோ கேட்டுள்ளதாக வரும் தகவல் உண்மைக்கு புறமானது. மதிமுகவை பொறுத்தவரை, கூட்டணி மந்திரி சபை வேண்டுமென்று நாங்கள் என்றைக்கும் கேட்டது கிடையாது. எங்களுடைய ஒரே குறிக்கோள் மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் வேரூன்ற கூடாது என்பதுதான்.

மேலும் படிக்க
வைகோ நடைபயணம் துவங்கவுள்ள இடத்தை திருச்சி எம்பி துரை வைகோ நேரில் ஆய்வு
31 டிச., 2025
Dinakaran

வைகோ நடைபயணம் துவங்கவுள்ள இடத்தை திருச்சி எம்பி துரை வைகோ நேரில் ஆய்வு

திருச்சியில் ஜன.2ம் தேதியன்று நடைபெற இருக்கும் மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ-வின் சமத்துவ நடை பயணம் துவக்க விழா நிகழ்ச்சிக்கான விழா மேடை உள்ளிட்ட மற்ற ஏற்பாடுகளை திருச்சி எம்பி துரை வைகோ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க
கழகப் பொதுச்செயலாளர்  வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம்
30 டிச., 2025

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம் திருச்சி - மதுரை 2026 ஜனவரி 02 ஆம் தேதி முதல் 12 ஆம் வரை ----------------- நாள்:02.01.2026 காலை 9:30 மணி புறப்படும் இடம்: உழவர் சந்தை, தென்னூர் திருச்சி வழி: அண்ணா நகர் கோர்ட் ரோடு. மேஜர் சரவணன் ரவுண்டானா. மத்திய பேருந்து நிலையம். அரிஸ்டோ மேம்பாலம். கிராபட்டி மேம்பாலம். எடமலைப்பட்டி புதூர் வழியாக ஏ.கே.தம்பியப்பா மகால் வந்தடைதல்.

மேலும் படிக்க
தமிழருவி மணியன் துணைவியார் மறைவு – வைகோ நேரில் அஞ்சலி
30 டிச., 2025

தமிழருவி மணியன் துணைவியார் மறைவு – வைகோ நேரில் அஞ்சலி

மூத்த தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்களின் துணைவியார் இன்று மறைவெய்தினார். தகவல் அறிந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தமிழருவி மணியன் அவர்களின் இல்லம் சென்று, மறைந்த அவரது துணைவியாரின் உடலுக்கு மாலை வைத்து புகழஞ்சலி செழத்திவிட்டு, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் படிக்க
தந்தை பெரியார் நினைவுநாள்! வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்!
24 டிச., 2025

தந்தை பெரியார் நினைவுநாள்! வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்!

தந்தை பெரியார் நினைவுநாள்! வைகோ புகழ் வணக்கம் செலுத்தினார்! தந்தை பெரியார் அவர்களின் 52 ஆவது நினைவுநாளை முன்னிட்டு, இன்று 24.12.2025 புதன்கிழமை காலை 8 மணியளவில் சென்னை, வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அவரது நினைவிடத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

மேலும் படிக்க
சமத்துவ நடைபயண தொடக்க விழா அழைப்பிதழ்: முதல்வரை சந்தித்த வைகோ
16 டிச., 2025

சமத்துவ நடைபயண தொடக்க விழா அழைப்பிதழ்: முதல்வரை சந்தித்த வைகோ

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (16.12.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்கள் நிர்வாகிகளுடன் சந்தித்து, திருச்சி முதல் மதுரை வரை தனது தலைமையில் நடைபெறும் சமத்துவ நடைப்பயணத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 2, 2026 அன்று திருச்சிராப்பள்ளி உழவர் சந்தை திடலில் தொடங்கி வைக்கவுள்ள விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

மேலும் படிக்க
புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!
16 டிச., 2025
Oneindia

புதிதாக அரசியலுக்கு வந்தவர்களால்.. திமுகவை ஒன்றும் செய்ய முடியாது.. விஜய்யை மறைமுகமாக சாடிய வைகோ!

புதிதாக அரசியலுக்கு வந்தவர்களாலும், ஏற்கனவே இருப்பவர்களாலும் திமுகவை வீழ்த்த முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். யாருடன் யார் கூட்டணி அமைத்தாலும் மக்கள் ஆதரவு திமுக கூட்டணிக்கு இருப்பதாக கூறிய வைகோ, திமுக மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க
அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்! கழகப் பொதுச்செயலாளர்  வைகோ புகழ் வணக்ககம் செலுத்தினார்
6 டிச., 2025

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்! கழகப் பொதுச்செயலாளர் வைகோ புகழ் வணக்ககம் செலுத்தினார்

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்! கழகப் பொதுச்செயலாளர் வைகோ புகழ் வணக்ககம் செலுத்தினார் பாபாசாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ,இன்று 06.12.2025 சனிக்கிழமை காலை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருச் விலைககு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினார்

மேலும் படிக்க
மேதகு 71வது பிறந்தநாள் – தாயகத்தில் ம.தி.மு.க. சார்பில் சிறப்பு கொண்டாட்டம்
26 நவ., 2025

மேதகு 71வது பிறந்தநாள் – தாயகத்தில் ம.தி.மு.க. சார்பில் சிறப்பு கொண்டாட்டம்

தமிழ் தேசியத் தலைவர் மேதகு அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று மறுமலர்ச்சி திமுக சார்பில் தலைமை கழகம் தாயகத்தில் கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது

மேலும் படிக்க
தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு
11 நவ., 2025

தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு

தேர்தல் சீர்திருத்தம் என்பது ஜனநாயக மோசடி! வைகோ குற்றச் சாட்டு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், இன்று 11.11.2025 சென்னை தங்கச்சாலையில் நடைபெற உள்ள SIRக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்

மேலும் படிக்க